பித்தப்பை கற்களுக்குத் தீர்வு
பித்தப்பை கற்களுக்குத் தீர்வு
நிறையப் பேர் பித்தப்பை கல் பிரச்சனை ஏற்பட்டு, சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால், எந்த பலனும் அளிக்காமல் இறுதியாக தான் மருத்துவப் பரிசோதனைக்கு வருகிறார்கள். பித்தப்பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தான் தீர்வாக உள்ளது என்று கல்லீரல் கணையம் மற்றும் குடல் நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ம.வெங்கடேசன் கூறுகிறார். இத்துறையில் 16 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட இவர், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்லீரல், குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராகத் திகழந்து வருகிறார்.
மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10 பேருக்கே மருந்து குணமளிக்கிறது. தற்போது, லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. பித்தப்பை என்றால் என்ன? பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும், பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. 7 முதல் 12 செ.மீ நீளம் இருக்கும்.
அதன் கொள்ளளவு 50 மி,மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும் போதும், அதில் உள்ள கொழுப்பு சத்து, கால்சியம், தண்ணீர், பித்த நீர் உருவாகிற போது பித்தப்பை செயல்படுகிறது. இது கல்லீரலில் இருந்து ஒரு மணி நேரத்தில் சுரக்கும். 40.மி.மீ பித்தநீரை சேகரிக்கும் பணியை செய்கிறது. இந்த பித்தப்பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை சுருங்குகிறது. அவ்வாறு பித்தப்பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப்பையில் சுரக்கும் நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.
இந்த பித்தப்பை ஜீரணத்திற்கு தேவையான உணவு உண்பதும், இதனால், பையில் இருக்கும் நீரை சுரக்கிறது. நீர்குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த பித்தப்பையில் ஏற்படும் கற்களும் நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். பித்தப்பை கற்கள் எதனால் உருவாகிறது? அது யார் யாருக்கு உருவாகும்? பல்வேறு காரணங்களால் பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும், பித்தப்பை கற்கள் வரலாம். பித்தப்பையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏற்படும் வேதியியல் மாற்றத்திற்கு ஏற்ப கட்டிகள் உருவாகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பித்தப்பை கற்கள் உருவாகின்றன. பித்தக்கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன. பொதுவாக உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பது.
கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்தநீர்ப்பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப்பையில் கற்கள் உண்டாகின்றன. பித்தப்பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு வாயுத்தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது. மஞ்சள் காமாலை நோய் தாக்குகிறது. கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.
நிறைய பேர் பித்தப்பை கல் பிரச்சனை ஏற்பட்டு சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத் தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள். பெண்களை குறிவைக்கும் பித்தப்பை கற்கள் பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. பித்தநீர் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் வேறுசில காரணங்களாலும் பித்தப்பை கல் வர வாய்ப்பு உள்ளது.
நோயின் அறிகுறிகள்:
வயிற்றில் வலதுபுறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுவதால், மஞ்சள் காமலை, பசியின்மை, வாய்வு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை நோயின் அறிகுறிகள்.
இந்நோயை கண்டறிவது எப்படி?.... மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா?.... பித்தப்பை கற்களை அல்ட்ரா சவுண்ட சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படுகிறது.
பித்தப்பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10 பேருக்கு மருந்து குணமளிக்கிறது. அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள்.
மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சனை துவங்கிவிடும். மேலும், மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, பித்தப்பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும். அறுவை சிகிச்சை என்றால், வயிற்றை கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல.
தற்போது வயிற்றைக் கிழிக்காமல் ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் லேப்ரோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார் டாக்டர்.ம.வெங்கடேசன், சென் மருத்துவமனை, பெரம்பூர், சென்னை.
குறிச்சொற்கள்: