ஆக்டோபஸ் (அன்டார்டிக்கா கடல்)
ஆக்டோபஸ் (அன்டார்டிக்கா கடல்)
மெல்பர்ன் பல்கலைக்கழகம், நார்வே அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து மருத்துவர் பிரையன் பிரை தலைமையில் கடல்வாழ் உயிரினமான ஆக்டோபஸ், கட்டில் பிஷ் எனப்படும் சிப்பி மீன் மற்றும் இதர ஆழ்கடல் மீன்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்த ஆராய்ச்சியின்போது ஆக்டோபஸ் மேலும் 4 புதிய இனங்களைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் இதில் கண்டறியப்படாத மேலும் பல இனங்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அன்டார்டிக்கா கடல் பகுதியில் வாழும் ஆக்டோபஸின் நஞ்சு மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் என்கின்றனர். பொதுவாக விலங்குகளின் நஞ்சு மனித இனத்துக்கு மருந்தாக பயன்படுகிறது.
ஆக்டோபஸின் நஞ்சில் மிகக் குறைந்த அளவில் சத்துமிக்க புரதச்சத்து இருப்பதும், அது மனிதனுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அன்டார்டிக்கா கடல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 203 ஆக்டோபஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல நாம் இருக்கும் இடத்தில் ஒரு பத்து நிமிடம் மின்சாரம் இல்லாம இருந்தா வேலையே ஓடாது.
ஆனால் இந்த அன்டார்டிக்கா கடலில் நான்கு மாதங்கள் முழுவதும் ஒரே இருட்டாகத்தான் இருக்கும். மேலும் அந்த பகுதியில் படிந்துள்ள பனிக்கட்டிகள் மொத்தமும் உருகத் தொடங்கினால், உலகில் 60 ஆண்டுகள் பெய்யும் மழைக்கு சமமாம்.
குறிச்சொற்கள்: