சாரணர் இயக்கம்
சாரணர் இயக்கம்
வருடந்தோறும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது.
சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும்.1907 ஆம் ஆண்டு சர் பேடன் பவல் பிரபுவால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டது.இளைய சமூகத்தினர் மத்தியில் உடல் மற்றும் மன ரீதியான பல சமூக மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆண்களுக்கான சாரணர் இயக்கம் குருளைச்சாரணர், ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது . இதுவும் ஆண்களுடைய அமைப்பைப்போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து காணப்பட்டது.
சாரணர் இயக்கம் உலகிலுள்ள இளைஞர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில் உலகின் 216 நாடுகளிலும் ஆண்களும் பெண்களுமாக மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர். சாரணர் இயக்கத்தை பொருத்தவரையில் ஆகஸ்ட் முதலாம் தேதி சில நாடுகளில் இத்தினம் கொண்டாடினாலும், ஜுலை மாதத்தில் இறுதி வாரமும், ஆகஸ்ட் மாதத்தில் முதலாம் வாரமும் முக்கியமான நாட்களாகும்.
முதலாவது சாராணியர் உலக மாநாடு 1920 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒலிம்பியா எனுமிடத்தில் நடைபெற்றது. 1910ல் சாரணியம் உலகெங்கும் பரவத் தொடங்கியது. தற்போது உலகில் சாரணர் சங்கங்கள் 216 நாடுகளில் செயல்படுகின்றன. இதுவரை விண்ணில் காலடி பதித்த 12 பேரில் 11 பேர் சாரணர்கள் 1959 லிருந்து இதுவரை 214 பேர் விண்வெளி விஞ்ஞானிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள், அவர்களில் 125 பேர் சாரணர்கள்.
நான்காண்டுகளுக்கு ஒருமுறை சாரணர் ஜம்போரி உலக நாடுகளில் நிகழ்கின்றது. 2007ஆம் ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற மாநாட்டில் 147 நாடுகளைச் சேர்ந்த சுமார் 24, 000 சாரணியர்கள் பங்கேற்றனர். 22வது உலக மாநாடு 2001இல் சுவீடன் நாட்டிலும், 23வது உலக மாநாடு 2015ஆம் ஆண்டு ஜப்பானிலும் நடைபெர்றது. 24வது உலக மாநாடு 2019ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையிலும் பார்க்கக் கூடுதலான நாடுகளில் செயல்படும் தொண்டு நிறுவனமாக சாரணர் அமைப்பு விளங்குகின்றது. உலகம் முழுவதிலும் 38 மில்லியன் சாரணர்கள் உள்ளனர். பேடன்பவல் தனது மனைவியுடன் இறுதிக்காலத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் வசித்தார். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 8 நாள் காலமானார்.
குறிச்சொற்கள்: