இசை பிரியர்களுக்கு மியூசிக் தெரபி படிப்பு
இசை பிரியர்களுக்கு மியூசிக் தெரபி படிப்பு
- இசை, நாட்டியத்தில் ஈடுபாடு உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகையோடு பட்ட, பட்டயப் படிப்புகள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இசைக் கல்லூரிகளில், இசைக் கலை தொடர்புடைய டிப்ளமோ, டிகிரி, முதுநிலைப் படிப்பு ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் இசைக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக் கலை, பரதநாட்டியம் எனும் தலைப்பில் மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளும், மேல்நிலை இசைக் கலைமணி நட்டுவாங்கக் கலைமணி எனும் தலைப்புகளில் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளும், இசை ஆசிரியர் பயிற்சி எனும் ஓராண்டு பட்டயப் படிப்பும் நடத்தப்படுகிறது.
- உலகில் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. நவீன யுகத்தில் இசைக் கலையின் அபரீத வளர்ச்சி மருத்துவத் துறையில் மியூசிக் தெரபி கொடுத்து, நோயை குணமாக்கும். அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே இசைப் பள்ளியில் சேர முடியும் என்ற தவறான கருத்து உள்ளது.
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே, இசைக் கல்லூரியில் சேர்ந்து பயிலலாம். இசையில் தனியாத ஆர்வம் கொண்டவர்கள், சாதிக்க வேண்டும் என்ற விரும்புவர்கள் தங்களின் தனித்திறன் மூலம் சாதனையில் உச்சத்தை அடைய நல்லதொரு வாய்ப்பை இசைக்கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுக்க காத்திருக்கின்றன.
- மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை 044 - 24937217, மதுரை 0452 - 2370861, கோயம்புத்தூர் 0422 - 2479686, திருவையாறு 04362 - 261600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
குறிச்சொற்கள்: