இயற்கையை நேசிப்போம்
இயற்கையை நேசிப்போம்
இந்த உலகம் மிக மிக இனிமையானது தவறான புரிதலால் தடம் மாறிச் செல்கிறோம். இயற்கையை ரசிக்கத் தவறுகிறோம். வாய்க்கும் கைக்கும் தடுமாறும் உலகம் தான். இருந்தும் இயற்கையை ரசித்துக் கொண்டே இருந்தால் இந்த உலகம் மிக மிக இனிமையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அப்படிப் புரிந்து கொள்ளும் போது பணியாற்றும் திறன் மேம்படும். எந்த வேலையையும் சுலபைமாகச் செய்ய இயலும் புரியலோடு செய்தால் எதுவும் வெற்றியாகும்.
கோடிக்கணக்கான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன. ஒரு நூறு உயிரினங்களை நாம் அறிந்திருக்கலாம். இயற்கையோடு இணைந்திருக்கும் இவைகளைக் கண்டு மகிழ்ந்தால் உள்ளம் உவகைக் கொள்ளும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் இயற்கையின் ரகசியங்களை நம்மால் அறிய இயலாது. இறப்பையும் விரும்பாது. இயற்கை அழகை ரசியுங்கள், இதயத்தைத் தொலையுங்கள் மகிழ்வோடுவாழுங்கள் இந்த உலகம்மிகமிக இனிமையானது.
எடப்பாடி ஆ. அழகேசன்
குறிச்சொற்கள்: