தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்
தலைவர் என்று சொன்னால் ஒரு மரியாதைக்குரிய முதன்மை வேலையாள் அல்லது பணியாளர் என்பதே தலைமையின் பொருள். மக்களின் எஜமானர் அல்ல என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு சிறந்த சமுதாய தொண்டராக, பொது நல சேவையில் அக்கறை கொண்டவராகவும், அதற்காகவே வாழ்க் கையை அர்ப்பணித்தவராகவும் இருக்க வேண்டும்.
எதிரில் இருப்பவரை எதிரியாகக் கருதாமல், யார் மாற்றுக் கருத்தை சொன்னாலும், நல்லவையாக இருந்தால் அதை அக்கறையுடன் உணர்த்தி புரிய வைப்பதும் முக்கியமான பண்பாகும். ஒருவர் சிந்தனை, சொல், செயல் இவற்றில் வேறுபாடு கொண்டவராக இல்லாமல் இருக்க வேண்டும்.
தற் பெருமை கொள்ளாமல், மற்றவர் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் இடிந்து போகாமலும் சமநிலை கொண்ட வராக இருக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்டு மக்கள் இடும் கட்ட ளையை தலைமேல் ஏற்று செய்யும் தலைமை பண்பாளராக, தலைமைத் தொண்டனாக இருக்க வேண்டும்.
தன் பதவியின்மேல் மோகம் இல்லாமல், தன்னைவிட சிறந்த நிர்வாகத் திறமை உடையவரை தலைமையை அடையாளம் காணும்போதும் அவர் களை முன் னிறுத்தி பின்செல்லும் ஒரு தொண்டனாக செயல்பட வேண்டும்.
தன்னுடைய தவறான ஒவ்வொரு அசைவிலும் பல சாதாரண மக்களின் வாழ்க்கையும், அவர்களின் எதிர் காலமும் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, விழிப்பு ணர்வுடன் செயலாற்ற வேண்டும்.
சட்டத்திற்கு புறம் பான செயலை தானும் செய்யாமல், தவறான காரியம் செய்பவரையும் உடன் வைத்துக்கொள்ளாமல் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். தன்னை முதன்மைப்படுத்தாமல் தன்னை தாழ்த்திக் கொண்டு மற்றவர்களையும், இந்த சமுதாயத்தையும் உயர்த்துபவராக இருக்க வேண்டும்.
நன்கு படிப்பது, சிந்தனையை வளர்த்துக் கொள்வது, சுய முன்னேற்றம் அறிவைக் கொண்டு நேர்மையாக தனக்கு தேவையான பொருளை தன் திறமையால், நேர்மையான வழியில் ஊட்டி தன்னிறைவு அடைவது இத்தகைய தன்மையை பெற்றிருக்க வேண்டும்.
சமுதாய ஈடுபாடு தன் சுயதேவைகள் பூர்த்தியடைந்து, தன் குடும்பம் தன்னை நம்பி இல்லை என்ற நிலையில் சமுதாய சேவையில் ஈடுபடுவது என்பதை எண்ணா மல் இருப்பது என்ற நிலையில் சமுதாய சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
வெளிப்படையான வாழ்க்கை மற்றும் அணுகுமுறை, மனதில் பட்டதை பளிச்சென சொல்லுவது யார் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றி எண்ணாமல் எது மக்க ளுக்கு, சமுதாயத்திற்கு நல்லதோ அதை செய்ய வேண் டும்.
உடனடி தலைவராக மாறாமல் பத்து, இருபது ஆண்டு கள் பொது வாழ்க்கை யில் ஈடுபட்டு தன் அறிவு, கொள்கை, சிந்த னையை பயன்படுத்தி பொது வாழ்க் கையில் தன்னை தயார்படுத்தி, தலைமைப்பண்பை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையை அடைய வேண்டும்.
ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இருப்பவர்கள் தன் பெயரை பயன்படுத்தி அரசியலுக்கோ, பொது வாழ்க் கைக்கோ வருவதை அதாவது குடும்ப அரசி யலை உருவாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசியலில் உள்ளவர்கள் நிறைய படித்தவர்களாக இருக்க வேண்டும். அதனு டன் நிறைய படிப்பது பல நூல்களை எழுதுவது என தன் ஆற்றலை வெளிப் படுத்துபவராக இருக்க வேண்டும். இப்படி படித்து, எழுதி சிந்தனையை வளர்த் துக் கொள்பவரால்தான் நல்ல சிந்தனையோடு இந்த சமுதாயத்தை சீர்திருத்த பாதை யில் அழைத்துச்செல்ல முடியும்.
பணம், பதவி மேல் ஆசை கொள்ளாமல் ஒரு வாழ்க் கையை மேற் கொள்ள வேண்டும். தேசப்பற்று மிக்க வராக இருக்க வேண்டும். மொழி, இனம் கடந்து தன்னை அர்ப்பணிப்பவராக இருக்க வேண்டும். அப்படி யானால் கர்ம வீரர் காமராஜர் போல் ஒரு நல்ல தலைவராக இருக்க வேண்டும்.
காமராஜர் இதைவிட ஒருபடி மேலேபோய் தன் திருமண வாழ்க்கைகூட பொது வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் என்று அஞ்சி திருமணம் என்ற பந்தத்திற்குள் செல்லாமலே வாழ்ந்து காட்டியவர். இன்றைய தலைவர்கள் காமராஜர் போல் தியாக வாழ்க்கை வாழாவிட்டாலும் பரவாயில்லை.
தன் குடும்பத்தைப்போல் இந்த நாட்டு மக்களையும் நினைத்து செயல் பட்டாலே 90 சதவீத பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இன்று நல்ல ஆட்சியர்கள், நல்ல ஐபிஸ் அதிகாரிகள், நல்ல நீதிபதிகள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக வர வேண்டும்.
இன்றைய மாணவர்களுக்கு இப்படிப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை அர்ப்பணிப்பு களை வரலாறாக மட்டும் கூறாமல் அவர்கள் போல் வாழ்ந்து காட்ட அதிகமாக கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு நல்ல தலைவன் என்பவன் வேறெங்கும் இல்லை.
நம்மிடையேதான் இருக்கிறான். என்பதை உணர வேண்டும். நாளை நாம் மற்றும் நம் குழந்தை கள்கூட தலைவர்களாகவும் வரலாம். இன்றைய சமுதாய வளர்ச்சி நாளைய சிறப்புமிகு சமுதாயத்திற்கு கொடுக்கும் சிறு நெருப்பு. அந்த நெருப்பை பற்ற வைப்போம். மக்கள் மத்தியில் காட்டுத் தீயை வளர்ப்போம்.
இன்றைய மாணவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறாமல், இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள் என்பதை கூறி அவர்களை நல்ல தலைவர்களாக வர தேவையான கல்வி, சிந்தனை, மனிதாபிமானம், பொறுமை, கடமை உணர்வு, சமு தாய சீர்திருத்தம், பெண்களை மதித்து நடத்தல், பேச்சில் நேர்மை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி நல்ல விஷயங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும், இந்த சமுதாயமும் கற்றுக் கொடுத்தால் இனி வரும் சமுதாயமாவது சிறந்த தலைவனை அடைந்து சிறப்படையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறிச்சொற்கள்: