காமராஜர் மதிய உணவு திட்டம்
காமராஜர் மதிய உணவு திட்டம்
காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டி ருந்தார். காரில் அவருடன் உதவியாளரும் இருந்தார். அன்றைய தினம் பகல் 11 மணியளிவில், கார் கோயில் பட்டி அருகே வரும் போது, வழியில் 12 வயது சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான்.
அதைக் கண்ட காமராஜர் டிரைவரிடம் காரை நிறுத் துப்பா என்று கூறினார். பின்னர் அந்த சிறுவன் அருகே சென்று தம்பி நீ படிக்க வேண்டிய வயதில் மாடு மேய்க் கிறாயே பள்ளிகூடம் போக வேண்டியது தானே என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் பள்ளிக்கூடம் போனால் கஞ்சி கிடைக்குமா.......? என்று அவரிடம் கேட் டான். அந்தக் கேள்வி காமராஜரின் மனதை பாதித்தது.
அப்ப நீ படிப்பதற்கு கஞ்சி தான் தடையா...? சரி மதிய வேளை கஞ்சி கொடுத்தால் நீ பள்ளிக்கூடம் போவாயா? என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய சிறுவன் உற்சா கத்தில் ஓ போவேனே என்று கூறி னான். அன்று தான் காமராஜர் ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பிற்கு தடையாக இருப்பது மதிய உணவு தான் என்ற முடி வுக்கு வந்தார்.
உடனே மதிய உணவு திட் டத்தை கொண்டு வந்தார். இன்றைக்கு டாக்டராக, இன்ஜினியராக கலெக்டராக இருப்பவர்களின் தலைமுறையைப் பின்னோக்கிப் பார்த்தால், அவர்களின் கல்விக்கு காமராஜர் கார ணமாக இருப்பார்.
குறிச்சொற்கள்: