கிரீன் டீ-பயன்கள்
கிரீன் டீ-பயன்கள்
கிரீன் டீயில் பல வித உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். கிரீன் டீயில் பல வகைகள் உள்ளது. அவைகளில் பல சுவை மணங்களும் பல வீதத்தில் காப்பைனும் அடங்கியுள்ளது.எந்த கிரீன் டீ அதிக சுவையுடன் இருக்கும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்ததாகும். இருப்பினும் மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப் பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கீரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல் நல பயன்கள் கிடைக்கும்.
இப்போது கருப்பட்டி காபி, சுக்கு காபி, இஞ்சி டீ, கருஞ்சீரக கஷாயம் குடித்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இது கிரீன் டீ காலம் குண்டு உடம்பை குறைக்க, சரும சுருக்கமின்றி இளமையுடன் இருக்க கிரீன் டீ பருகலாம். “கமீலியா சினஸிஸ்” என்ற தாவரத்தின் இலைகளில் இருந்து கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது.
முதன்முதலில் சீனாவில் தான் கிரீன் டீ பழக்கம் தோன்றியது. கொதிக்கும் நீரில் இலைகளை கிள்ளிப்போட்டு கிரீன் டீ தயாரித்தார்கள். அங்கிருந்து படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளுக்குப் பரவியது. கடந்த 2 ஆணடுகளில் தான் இந்தியாவில் கிரீன் டீ குடிப்பவரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உடல்நலம் குறித்த அக்கறையும், கிரீன் டீக்கு பெரிய அளவில் செய்யப்படும் விளம்பரங்களும்தான் முக்கிய காரணம். கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது. உடலில் உள்ள பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதிக்காமல் தடுக்கிறது. பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும்.
இதனால் உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது. கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன் டீக்கு உண்டு. இதனால்தான் எடை அதிகமுள்ளவர்களுக்கு கிரீன் டீ குடிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறோம். எடை குறைவானவர்களும் கிரீன் டீ அருந்தலாம்.
பொதுவாக 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கிரீன் டி குடிக்கலாம் உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைத்திருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட்டுகள் பழங்கள் பச்சைக்காய்கறிகள் போன்றவற்றிலும் இருக்கிறது என்பதால், சமச்சீர் உணவு அவசியம். வைட்டமின் சி, வைட்டமின் இ ஆகிய சத்துகளும் ஆண்டி ஆக்சிடென்ட்டுகளாக செயல்படக் கூடியவை. கிரீன் டீக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும், நீரிழிவு வருவதற்கு முந்திய நிலையில் உள்ளவர்களுக்கும் கிரீன் டீ அருந்தி பயன் பெறலாம்.
வயதாகும் போது தோலில் ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் வேலையையும் கிரீன் டீ செய்கிறது. இப்படி ஆண்டி ஏஜிங் காரணியாக விளங்குவதால், அழகு சாதனப்பொருட்கள் பலவற்றில் மூலப்பொருளாக கிரீன் டீ சேர்க்ப்படுகிறது. கிரீன் டீ பைகளை சுடுநீரில் மூழ்கச் செய்த அதில் கிடைக்கும் இயற்கையான டீயைக் குடிப்பதே நல்லது அதிக பட்சம் 3 வினாடிகளுக்கு மேல் டீ பைகளை நீரில் மூழ்கச் செய்யக் கூடாது.
சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ தேனோ கலந்து குடிப்பார்கள் இதனால் கிரீன் டீ உடலை ‘டீடாக்ஸ்’ செய்து நச்சுகளை வெளியேற்றும் தன்மையை இழந்துவிடும். எதுவும் இருப்பினும் சிறிய துண்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து குடிக்கலாம். நச்சுக்களை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும். அதிக பட்சம் 2 அல்லது 3 கப் மட்டடுமே குடிக்க வேண்டும். ஒரு கப் என்பது 150 முதல் 200 மி. லி. வரை மட்டுமே.
கிரீன் டீயிலும் கஃபைன் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது உடலில் சேர்ந்தால் தூக்கம் வருவதைக் கெடுக்கும். மன அழுத்தம், குழப்பம், பதற்றம் உட்பட மனநலம் சார்ந்த பல பிரச்சனைகளை உருவாக்கும். கர்ப்ப காலத்திலும், பால் கொடுக்கும் கால கட்டத்திலும் கிரீன் டீயை தவிர்ப்பது நல்லது. இரும்புச்சத்து ஃபோலிக் அமிலம் போன்றவை கர்ப்ப காலத்தில் குறைவாக இருக்கும். அப்போது கிரீன் டீயை அருந்தினால் இதிலுள்ள டேனின் என்ற வேதிப்பொருள் இரும்புச்சத்து ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உடலில் உறிஞ்கப் படுவதைத் தடுத்துவிடும்.
இதனால் சத்துக்குறைபாடு ஏற்பட்டு கர்ப்பம் கலைவதோ குறைப் பிரசவமோ கூட ஏற்படுத்தலாம். உணவு சாப்பிடும் ஒரு மணி நேரத்துக்கு முன் அல்லது உணவு சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்தே கிரீன் டீ அருந்த வேண்டும். சாப்பிட்ட உடனே அருந்தினால் உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை வெகுவாகக் குறைத்துவிடும். கிரீன் டீ அருந்தினால் பற்களில் சொத்தை விழாமல் இருக்கச் செய்யும். ஆனால் அதிகமாக கிரீன் டீ குடித்தால் பற்களில் கறையை ஏற்படுத்தும். ஆதலால் அளவோடு குடித்து வமாக வாழ்வோம்.
குறிச்சொற்கள்: