சூரிய நமஸ்காரம்12 நிலைகள்
சூரிய நமஸ்காரம் 12 நிலைகள்
யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும். உள்ளுறுப்புகள் தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.யோகாப் பயிற்சியின் சிறப்புகள், தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.
ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:
பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன. தங்கு தடை இல்லா இரத்த ஒட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.
சூரிய நமஸ்காரம்
காலையிலோ, மாலையிலோ சூரியனைப் பார்த்தவாறு சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இவ்வாறு சூரியனைப் பார்த்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதகம் தான். உடல் மேல் விழும் ஒளிக்கதிர்கள், வியர்வையோடு வெளிப்படும் நச்சுப் பொருட்களை உறிஞ்சிக் கொள்கின்றன. தூய்மையான ரத்த ட்டம் ஏற்படுகிறது. செல்களுக்கும் உயிரை வழங்குகின்றன. இது சூரியனால் மட்டுமே முடியும். ஆகையால் சூரிய நமஸ்காரம் ஒரு வரப்பிரசாதமாகும். முதுகெலும்பிற்கு 12 நிலைகள் உள்ளன. அது போலவே சூரிய நமஸ்காரம் செய்முறைகளுக்கும் 12 நிலைகள் உடையன. ஒவ்வொரு செய்முறையும் தண்டுவடத்திலுள்ள எலும்புகளுக்கு வெவ்வேறு அசைவுகளைக் கொடுக்கின்றன.
செய்முறைகள்:
- கால்கள் இரண்டையும், ஒன்று சேர்த்து நேராக நிமிர்ந்து நிற்கவும், சூரியனைப் பார்க்கவும். உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டைப் பெருவிரல்கள் இரண்டையும் நெஞ்சின் மத்தியில் வணங்குவது போன்று வைக்கவும். ‘ஒம் ஹராம் மித்ராய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மெதுவாக உள்மூச்சு வாங்கவும். கைகளிரண்டையும் நேராக நிமிர்த்தி தலைக்கு மேல் தூக்கவும். பின்புறம் வளையவும். ‘ஒம் ஹாரம் ரவயே நமஹ’ என உச்சரிக்கவும்
- மெதுவாக மூச்சை வெளியேவிடவும். உள்ளங்கைகள் பாதங்களுக்கு இணையாக நிலத்தைத் தொடும் வரை மெதுவாக முன்புறம் வளையவும். முழங்கால்களைத் தலையால் தொடவும். கால்கள் வளையாமல் நிமிர்ந்தவாறு இருக்க வேண்டும். ‘ஒம் ஹரூம் ஸர்யாய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மெதுவாக உள்மூச்சை எடுத்துக் கொண்டே வலதுகாலை பின்புறம் நீட்டவும். அப்போது கைகளையும், இடது காலையும் அசைக்காமல் உறுதியாக நிலத்தில் பதித்து வைக்கவும். தலையை மேலே தூக்கி முன்புறம் பார்க்கவும். இடது முழங்கால் கைகள் இரண்டிற்கும் இடையில் இருக்க வேண்டும். ‘ஒம் ஹரைம் பானவே நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை நிறுத்தவும். இப்போது இடது காலையும் பின்புறம் நீட்டவும். வலது பாதமும் இடது பாதமும், இணையாக நேராக இருக்க வேண்டும். கைகளும் கால் பெருவிரல்களும், உடல் பாரத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ‘ஒம் ஹரௌம் ககாய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை வெளியேவிடவும். மெதுவாக உடலை கீழே இறக்கவும். இரண்டு கால்பெரு விரல்கள், இரண்டு முழங்கால்கள், இரண்டு உள்ளங்கைகள், மார்பு நெற்றி ஆகிய எட்டு உறுப்புக்கள் மட்டும் நிலத்தைத் தொடவேண்டும். அடிவயிறு சிறிது தூக்கியபடி இருக்க வேண்டும். ‘ஒம் ஹராம ஹிரண்ய கர்ப்பாய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறே மெதுவாகத் தலையை மேலே தூக்கவும். முடிந்தளவுக்கு முதுகெலும்பைப் பின்பக்கம் வளைக்கவும். ‘ஒம் ஹராம் ஹிரண்ய கர்பபாய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை வெளியே விட்டவாறே மெதுவாகத் தலையைத் தாழ்த்தி உடலை மேலே தூக்கவும். பாதங்களும், உள்ளங்கைகளும் நிலத்தில் படிந்திருக்க வேண்டும். ‘ஒம் ஹாரம் மாசசயே நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறே இடதுகாலை இடது கை அருகில் கொண்டு வரவும். வலது காலும், வலது முழங்காலும் நிலத்தைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். முன்பக்கம் பார்க்கவும்.’ஒம் ஹரூம் ஆதித்யாய நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை வெளியே விட்டவாறே உள்ளங்கைகள் பாதங்களுக்கு இணையாக நிலத்தைத் தொடும் வரை மெதுவாக முன்புறம் குனிந்து வளையவும். முழங்கால்களைத் தலையால் தொடவும், கால்கள் வளையாமல் நிமிர்ந்து இருக்க வேண்டும். ‘ஒம் ஹரைம் ஸவித்ரே நமஹ’ என உச்சரிக்கவும்.
- மூச்சை உள்ளிழுத்தவாறே இரண்டு கைகளையும் நேரே தலைக்கு மேலே தூக்கி பின்புறம் வளையவும். ‘ஒம் ஹரௌம் அர்க்காய நமஹ’ என உச்சரிக்கவும்.
- முதல்நிலை மாதிரி நிமிர்ந்து நேராக நின்று சூரியனைப் பார்த்து உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டைப் பெருவிரல்கள் இரண்டையும் வணக்கம் செய்வது போல் நெஞ்சின் மத்தியில் வைக்கவும். ‘ஒம் ஹரஹ பாஸ்கராய நமஹ’ என உச்சரிக்கவும். இரண்டாவது நமஸ்காரத்தை இதுபோல் செய்யவும். 4ம் மற்றும் 9ம் நிலைகளில் மட்டும் இடது காலுக்குப் பதில் வலது காலை மாற்றிச் செய்யவும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி குறைந்தது ஐந்து நமஸ்காரங்கள் ஒரு வேளையில் செய்யலாம்.
பயன்கள்:
ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது.. வயிற்று உறுப்புகளில் ரத்தம் தங்குவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.
நினைவாற்றல் அதிகரிக்கும், உடல் பொலிவடையும். இதனை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும்.. ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லது.
குறிச்சொற்கள்: